நெல்லை மாநகர காவல் ஆணையருடன் கவின் உறவினர்கள் நேற்று மாலை நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதே நிலை நீடித்தால் வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை கொடுக்க நேரிடும் எனவும், போராட்டம் தொடரும் எனவும் அவர்களுடைய வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தார்.