ஐடி ஊழியர் கொலை வழக்கு-மாநகர காவல்துறை எச்சரிக்கை
நெல்லை மாநகர காவல்துறை;
நெல்லையில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு பற்றி சமூக வலைதளங்களில் தவறான வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கவின் கொல்லப்பட்டதாக கூறி தொடர்பு இல்லாத வீடியோவை சிலர் பகிர்ந்து வரும் நிலையில் காவல்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.