திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 4) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.அதில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட 32D,7C,10L/4 ஆகிய பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வின்பொழுது எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர்.