நெல்லையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார். அப்பொழுது பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிரச்சார மேடைக்கு எடப்பாடி பழனிச்சாமி செல்லும் பொழுது பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் எடப்பாடி ஒழிக என்ற கோஷங்களை எழுப்பி கருப்பு கொடி காண்பித்தனர்.