கொடை விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு

சந்தைப்பேட்டை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்;

Update: 2025-08-05 13:40 GMT
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே அமைந்துள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் மூப்பனார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 5) கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கொடை விழாவினை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கொடை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News