நெல்லை மாவட்டத்தின் காவல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் வாகனங்களை ஆய்வு செய்து சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி சிலம்பரசன் வழங்கினார்.