பணகுடியில் மரியாதை செலுத்திய சபாநாயகர்
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்;
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு பணகுடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பணகுடி திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.