வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்:
கோவில்பட்டியில், திடீர் ஆய்வு மேற்கொண்டு 4 வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.;
கோவில்பட்டியில், திடீர் ஆய்வு மேற்கொண்டு 4 வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி, அதிகாரிகள் கோவில்பட்டி பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட 2 சிற்றுந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்த 4 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டதுடன், காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிற்றுந்துகளை உரிய வழித்தடத்தில் இயக்கும்படி ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.