புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த தட்டாமனை பட்டியை சேர்ந்தவர் பானுமதி (65). இவர் தட்டாமனை பட்டியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெகநாதபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 335 ஒரு கிராம் மதிப்புள்ள குட்கா பொருளையும் ரூ.802 யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.