பூப்பல்லாக்கில் கள்ளழகர் பவனி.

மதுரை அழகர் கோவிலில் நேற்று இரவு கள்ளழகர் பூப்பல்லாக்கில் பவனி வந்தார்.;

Update: 2025-08-10 04:00 GMT
மதுரை அழகர் கோவிலில் உள்ள "பதினெட்டாம்படி கருப்பு" வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் நேற்று (ஆக.9) இரவு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடித்திருவிழாவின் 9ம் நாளான நேற்று இரவு பூப்பல்லாக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்திருவிழாவினை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி அரவிந்த் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News