திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாநில மாணவரணி தலைவராக மறுகால்தலையை சார்ந்த பூல்பாண்டி என்பவர் இன்று (ஆகஸ்ட் 16) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் புதிய தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.