கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வீடுகளில் விநாயகர் சிலைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்
கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வீடுகளில் விநாயகர் சிலைகள் வழங்கிய இஸ்லாமியர்கள்;
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா ஒட்டி ஆண்டு தோறும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி,கிருஷ்ணகிரி நகரில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு100 சிலைகள், பூஜை பொருட்களை இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினார். கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியில் மிலாடி நபி குழு தலைவர் அஸ்லம் தலைமையில் இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று ஒரு அடி விநாயகர் சிலைகள், ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம், கற்பூரம், ஊதுப்பத்தி, பூக்கள் அடங்கிய தட்டுக்கள் வழங்கினார்.