கள்ளக்குறிச்சி மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் ரோட்டரி சங்கம் மற்றும் மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்த தான முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தேர்வு ஆளுனர் சொந்தில்குமார், மண்டல துணை ஆளுனர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். முருகா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பாஸ்கர் வரவேற்றார். முருகா பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.