ராமநாதபுரம் விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது

திருவாடானை அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால்குட உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.;

Update: 2025-08-27 11:54 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே  பாரதிநகரில் இருக்கும்  கற்பக  விநாயகருக்கு கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி  காப்பு கட்டப்பட்டு பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றது. திருவிழா தொடங்கியதில் இருந்து  ஒவ்வோர் நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றது. பத்தாம் நாள் திருவிழாக விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் கற்பகவிநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கன பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இரவு கலை நிகழ்ச்சியுடன் நிறைவுபெறும்

Similar News