விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழங்கள் பூக்கள் விலை அதிகரிப்பு.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழங்கள் பூக்கள் விலை அதிகரிப்பு.;
கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தேவையான தேவையான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம்,சீதாபழம், கொய்யாப் பழம், வாழைமரம் மற்றும் அருகம்புல் மாலை அதிகளவில் நேற்று மாலை முதல் விற்பனைக்காக கிருஷ்ணகிரி பகுதியில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டி மற்றும் சாலை ஓரங்களில் வைத்து விற்பனை வியாபாரிகள் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புஒரு கிலோ குண்டு மல்லி 500 முதல், 800 ரூபாய்க்கு விற்ற நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகள் வருவதால் தற்போது 1200க்கு விற்பனை செய்யப்படுகிறது.