ஊத்தங்கரை: கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது.
ஊத்தங்கரை: கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிபட்டி சார்ந்த வாசுகி (48) என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் ஊத்தங்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஜாமினில் வெளிய வந்த அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து ஊத்தங்கரை போலீசார் அவரை தேடி பிடித்து அவரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்