ராமநாதபுரம்பெண்ணின் உடல் உறுப்புகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ள நோயாளிகளுக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற பெண் சாலையில் கீழே விழுந்து மூளை சாவு: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்;

Update: 2025-08-30 06:16 GMT
ராமநாதபுரம் மாவட்டம்இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற பெண் சாலையில் கீழே விழுந்து மூளை சாவு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உடல்உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற பெண் சாலையில் விழுந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் அப்பெண்ணின் உடல் உறுப்புகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ள நோயாளிகளுக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி சந்தியா (26) இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை. இந் நிலையில் கடந்த புதன் கிழமை மதியம் சந்தியா கமுதிக்கு செல்வதற்காக பேரையூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து அவ்வழியாக சென்ற உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். வாகனத்தில் ஏறி சில நிமிடத்தில் சந்தியா வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனை கவனிக்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சுமார் 200 மீட்டர் பிறகு பின்னால் பார்த்தபோது அமர்ந்திருந்த சந்தியாவை காணவில்லை என்பதால் திரும்பி வந்து பார்க்கும்போது சந்தியா மயக்கமான நிலையில் கிடந்துள்ளார். பின்னர் சந்தியாவை கமுதி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்ற போது அவர் மூளை சாவு அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து மூளை சாவடைந்த சந்தியாவின் இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, இதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பெற்று வரும் நோயாளிகளுக்கு உடல் தானம் செய்வதற்காக இன்று காலை ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தியாவின் உடலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதா ராணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார், அதனைத் தொடர்ந்து பேரையூர் சார்பு ஆய்வாளர் முருகன் மரியாதை செலுத்தியதுடன் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என பலரும் ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளி செல்லப்பட்ட சந்தியாவின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின் ஆம்புலன்ஸ் மூலமாக உடல் அவரது ஒரு சொந்த ஊரான பேரையூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு தானம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News