கம்பம் பகுதியில் யாசகம் பெற்றுக் கொண்டு சுற்றித்திரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமீர் என்பவர் நேற்று முன்தினம் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு இறந்து கிடப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இறந்தவர் குறித்து மேலும் விவரங்கள் கிடைக்காத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரியின் அடிப்படையில் கம்பம் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்