கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவர் இவரது மகனின் மருத்துவச் செலவிற்காக சிலரிடம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக வட்டி செலுத்த முடியாத நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த ராணி சில தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.