புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த குறிச்சிபட்டியை சேர்ந்தவர் கொம்பையன் (58). இவர் விராலிமலை ஏபி டவர் அருகே, சாலையை கடக்க முயன்ற போது அவருக்கு பின்னால் அரசு பேருந்தை ஓட்டி வந்த தவமணி(52) அவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்த கொம்பையன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி செல்லம்மாள்(55) அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.