வத்திராயிருப்பு அருகே கண்மாய்களில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை பள்ளி மாணவர்கள் உதவியுடன் அகற்றிய வனத்துறையினர்..*

வத்திராயிருப்பு அருகே கண்மாய்களில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை பள்ளி மாணவர்கள் உதவியுடன் அகற்றிய வனத்துறையினர்..*;

Update: 2025-08-31 14:23 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கண்மாய்களில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை பள்ளி மாணவர்கள் உதவியுடன் அகற்றிய வனத்துறையினர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் வத்திராயிருப்பு வனச்சரகம் சார்பில் வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கூமாபட்டி எஸ்.கொடிக்குளம் கண்மாய் மற்றும் விராகசமுத்திரம் கண்மாயில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம் நடைபெற்றது. இதில் எஸ். கொடிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வனக்காப்பாளர்கள்,வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு கண்மாயில் இருந்து சேகரிக்கப்பட்ட 15 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை தோட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Similar News