பூலித்தேவருக்கு மகளிர் அணி நிர்வாகிகள் மரியாதை
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் 310வது பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 1) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சியில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி நிர்வாகிகள் அலங்கரித்து வைக்கப்பட்ட பூலித்தேவர் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின்போது மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.