நெல்லையிலிருந்து செழியநல்லூர் சென்ற அரசு பேருந்து இன்று (செப்டம்பர் 1) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மானூர் ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்பொழுது திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.