காங்கேயத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
காங்கேயத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது இந்த தகவலை மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.;
காங்கேயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காங்கேயம் பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.