திருநெல்வேலி மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் மாநகராட்சிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்தனர். இதில் உதவி செயற்பொறியாளர் தங்கபாண்டியன் உடன் இருந்தார்.