தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருநெல்வேலி மாவட்டம் சார்பில் 2025ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால ஒத்திகை பயிற்சி இன்று (செப்டம்பர் 3) சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெற்றனர். இதில் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.