ஸ்ரீ வராஹி அம்மன் பீடத்தில் சிறப்பு பூஜை!
த்ரீஸ்தலம் ஸ்ரீ வராஹி அம்மன் பீடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் அமைந்துள்ள த்ரீஸ்தலம் ஸ்ரீ வராஹி அம்மன் பீடத்தில் இன்று ஆவணி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு த்ரீசக்தி வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.