ஆட்டோ ஓட்டுநர் கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

ஆட்டோ ஓட்டுநர் கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்;

Update: 2025-09-07 15:18 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனரை திமுகவின் ஆதரவாளரான மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை வைத்து ஏற்றி கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.அரசு வழக்கறிஞர் தூண்டுதலின் பேரில் கொலை சம்பவம் நடந்ததாகவும் குற்ற வாலிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி வீதியில் இந்தியன் வங்கி அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருபவர்கள் சக்கரகுளம் தெருவை சேர்ந்த செந்தில் குமார், நம்பி நாயுடு தெருவை சேர்ந்த திமுக ஆதரவாளர் பொன்ராஜ் இருவருக்கும் சவாரி எடுப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செந்தில் குமார் என்பவர் பொன்ராஜ் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் கற்பக விநாயகர் கோவில் தெரு அருகே செந்தில் சாலையில் நேற்று நடந்து வந்த போது திமுகவின் ஆதரவாளர் பொன்ராஜ் தான் ஓட்டி வந்த ஆட்டோவை அதிவேகமாக இயக்கி செந்தில் மீது பலமாக மோதியதில் செந்தில் தூக்கி வீசப்பட்டு பின் தலையில் அடிபட்டு விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். அருகே இருந்தவர்கள் பொன்ராஜை சத்தம் போட்டு அதே ஆட்டோவில் செந்திலை தூக்கிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில் செந்திலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில் செந்தில் குமார் உடல் உடற்கூறு ஆய்வுக்காக பினவறையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த நகர் காவல் துறையினர் பொன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்த செந்தில்குமார் என்பவர் அரசு வழக்கறிஞர் திருமலையப்பன் என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்ததாகவும் அரசு வழக்கறிஞருக்கும் செந்தில்குமாருக்கும் இடையே பொன்ராஜ் என்பவரால் அடிக்கடி பிரச்சனைகள் வந்ததாகவும் இந்நிலையில் அரசு வழக்கறிஞர் தூண்டுதலில் பேரில் பொன்ராஜ் என்பவர் செந்திலை ஆட்டோ ஏற்றி கொலை செய்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தும் அரசு வழக்கறிஞர்கள் மீது விசாரணையோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி செந்தில்குமார் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு வழக்கறிஞர் திருமறையப்பனை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர் தங்களுக்கு நீதி கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் பிணவறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News