அரசு பள்ளி மாணவிகள் பனை விதை சேகரிப்பு
பனை விதைகளை சேகரித்து ஆசிரியரிடம் வழங்கிய மாணவ மாணவிகள்;
மன்னார்குடி அருகே கண்டமங்கலம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதை விதைப்பதற்காக கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு பள்ளி கல்லூரி மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர் உதவியுடன் பனை விதைகளை சேகரித்து ஆசிரியரிடம் ஒப்படைத்தனர்.