கால்பந்து சீனியர் பிரிவு போட்டிக்கு செல்வோருக்கு வாழ்த்து
தமிழ்நாடு கால்பந்து கழக அணியினர் கேரளா மாநில பாலக்காடு சீனியர் பிரிவு போட்டிக்கு செல்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்;
தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பாக 30-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் அணியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழியனுப்பும் விழா 30 ஆவது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் தமிழக அணிக்கான போட்டித் தேர்வு கடந்த மாதம் 28.08.2025 முதல் 29.08.2025 பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் தமிழக முழுவதும் 13 வீராங்கனைகள் பங்கு பெற்றார்கள் போட்டியிலிருந்து 36 வீராங்கனைகள் தேர்வு செய்து பயிற்சி முகாம் நடத்தி அதில் 20 வீராங்கனைகள் பாலக்காட்டில் நடைபெறுகின்ற தேசிய கால்பந்து போட்டியில் பங்கு பெற 08.09.2025 மாலை ரயில் நிலையத்திலிருந்து செல்ல இருக்கிறார்கள் அவர்களை பாராட்டி வழியனுப்பும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் ரமேஷ் பட்டேல் செயலாளர் சண்முகம் தமிழ்நாடு விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் சிவா தமிழ்நாடு கால்பந்து கழக குழு ஒருங்கிணைப்பாளர் அஹமது பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்மன் ஸ்ரீதர் துணைச் செயலாளர் பயிற்சியாளர்கள் கலா சுமித்ரா ஆகியோர் கலந்துகொண்டு அவர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்வு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.