ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா;

Update: 2025-09-11 09:09 GMT
சித்தாமூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நூதன ஜீர்ணோத்தாரன புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கணபதி ஹோமம், மஹாலஷ்மி ஹோமம்,நவகிரக ஹோமம், உள்ளிட்ட பூஜாளுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, மாக பூர்ணாவதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரினை யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பெரியாண்டவர் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காமிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமதரிசனம் செய்தனர்.

Similar News