கணவனை கொலை செய்த - மனைவி, கள்ளக்காதலன் கைது

நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த - மனைவி, கள்ளக்காதலன் கைது;

Update: 2025-09-11 14:59 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை அடுத்த எல்லைசாமிபுரத்தை சேர்ந்த மாரியப்பன்(45) இவரது மனைவி பழனியம்மாளுக்கும் சூர்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இந்த கணவர் மாரியப்பனை மனைவி பழனியம்மாள், கள்ளக்காதலன் சூர்யா இருவரும் மாரியப்பனை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை போலீசார் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி பழனியம்மாள் கள்ளக்காதலன் சூர்யா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News