இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் அமைச்சர் மலர் தூவி அஞ்சலி

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்;

Update: 2025-09-11 15:42 GMT
தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் தியாகி இம்மானுவேல் சேகரனின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் மாநில பேச்சாளர் சரத் பாலா மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் திமுக அயலக அணி மாநகர அமைப்பாளர் கிரிஸ்டோபர் விஜயராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி,வைதேகி, நாகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News