செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்எல்ஏ

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்எல்ஏ;

Update: 2025-09-12 06:58 GMT
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகராட்சி, தொழுப்பேடு, ஆத்தூர், செம்பூண்டி, கரிசங்கால், கீழவலம் மேலும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான குடிநீர் குளம் சீரமைத்தல், அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குதல், ஏரியின் மதுகுகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் முன் வைத்தனர்.அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் சினேகா அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் நீக்கம், இருமுறை பதிவான வாக்குகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Similar News