உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு;
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் நகராட்சியில் 14,18, 19,வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறுபட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மேலாண்மை இயக்குநர் திறன் மேம்பாட்டு கழகம் கிராந்தி குமார் பாடி,இ.ஆ.ப., மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா, இ.ஆ.ப., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம்,மறைமலைநகர் தெற்கு நகர செயலாளர் த. வினோத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார்,வார்டு உறுப்பினர்கள்,வார்டு செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.