ஊதியூர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
காங்கேயம் அடுத்துள்ள ஊதியூர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு. இதுவரை உதவி ஆய்வாளர் தலைமையில் இயங்கி வந்த காவல் நிலையத்திற்கு புதிதாக முதல் முறை காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் போலீஸ் நிலையம் 1950-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது வரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரோஜா தற்போது ஊதியூர் போலீஸ் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.