மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
வத்தலகுண்டு அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெருமாள் கோவில் தெருவில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்துள்ளார். வீட்டில் இரும்பு கம்பியில் ஈர துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி(50) உயிரிழந்தார். ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகள் சவுந்தரபாண்டி(28), மகள் ராஜேஸ்வரி(30) ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.