புத்தகத் திருவிழாவில் கனிமொழி எம்பி பேச்சு
மதுரை புத்தக திருவிழாவில் நேற்று கனிமொழி எம்பி சிறப்பு உரையாற்றினார்;
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்குகளை பார்வையிட்டு, புத்தக தானப் பெட்டியில் புத்தகங்களை வழங்கி பொதுமக்களுடன் கலந்துரையாடி "தெற்கின் எழுச்சி" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை எம்பி வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.