வெள்ளகோவில் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
வெள்ளகோவில் ராசாத்தாவலசு தாசநாயக்கன்பட்டி மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்;
வெள்ளகோவில், ராசாத்தாவலசு, தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளகோவில் பகுதியில் வெள்ளகோவில், நடேசன் நகர், ராஜீவ்நகர், கொங்குநகர், டி.ஆர்.நகர், கரூர் ரோடு, கோவை ரோடு, குறுக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகர், கே.பி.சி.நகர், சேரன் நகர், காமராஜபுரம் ஆகிய இடங்களிலும், தாசவநாயக்கன்பட்டி பகுதியில் தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பகவுண்டன் வலசு, வேலம்பாளையம், கம்பிளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம்பூண்டி, கும்பம்பாளையம், சேர்வகாரன்பாளையம் ஆகிய இடங்களிலும் மேட்டுப்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம். கே.ஜி.புதூர். என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்ஜெகதீஷ் வரி தெரிவித்துள்ளார்.