பெரியார் பிறந்த தின விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் பெரியார் 147 வது பிறந்தது தின விழா;

Update: 2025-09-17 13:04 GMT
தந்தை பெரியார் 147 வது பிறந்த தினத்தை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் வர்த்தக அணி மேலும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்TOPM ஆகியவைகள் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இன்று காலை 8:30 மணிக்கு விடியல் ஆர் பிரகாஷ் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் தலைமையில் பரமன் பாண்டியன் திமுக வர்த்தகர்ரணி மாவட்ட துணை அமைப்பாளர் முன்னிலையில் ஈரோடு தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கோஷமிட்டு்ம் உறுதிமொழி ஏற்றும் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் திமுக தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர் கே ஏ ரவி, திராவிடர் கழக நகர செயலாளர் மானமிகு சரவணன் த பெ தி க தலைவர் சாமிநாதன், இலக்கியத் தள அன்பழகன், மதிமுக நகர செயலாளர் நீலகண்டன், AITUC தோழர்கள் நஞ்சப்பன், பாலசுப்பிரமணியம், Topm பஞ்சாலை சண்முகம், மதிமுக விஸ்வநாதன், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் நற்செயல்களை நினைவுகூர்ந்தார்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

Similar News