போடி அருகே ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (50). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன் தினம் இரவு அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்த நிலையில் தவறி கால்வாய்க்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு (செப்.23) பதிவு செய்து விசாரணை.