தேவாரம் பகுதியை சேர்ந்தவர் ராமுத்தாய் (70). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக மனநலம் பாதித்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.25) இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிணற்றுப் பகுதிக்கு ராமுத்தாய் சென்ற நிலையில் கிணற்றில் தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவாரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.