கண்டமனூர் போலீசார் நேற்று (செப்.25) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது குப்பிநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சுரேஷ் பாண்டியன் என்பவரை சோதனை செய்த பொழுது அவர் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் சுரேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.