தாளியூரில் நீர்மூழ்கி மோட்டார், பம்ப் திருட்டு – நால்வர் கைது!

தாளியூரில் திருட்டு வழக்கு – போலீசார் அதிரடி.;

Update: 2025-09-26 08:35 GMT
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளியூர் ஜெயா நகரில், காம்பவுண்ட்டுக்குள் பழுதுபார்க்க வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரும் பம்பும் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஒப்பந்ததாரர் மணியன் (56) புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், வடவள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நரசிம்மா (19), ராஜதுரை (22), அருஞ்சோதிர்வேல் (22) ஆகியோர் மோட்டாரை திருடியதும், ரதினபாண்டி (44) என்பவர் திருடப்பட்ட பொருள்களை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் இந்நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 ஹெச்பி நீர்மூழ்கி மோட்டார் மற்றும் 3 ஹெச்பி பம்ப் ஆகிய ரூ.60,000 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News