தர்மபுரியில் ஏழாம் ஆண்டு புத்தக திருவிழா தொடக்கம்
தருமபுரி மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா தொடக்கம்;
தருமபுரி மாவட்டம், மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா 2025-ஐ முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஓய்வு இறையன்பு, மாவட ஆட்சித்தலைவர் சதீஸ், முன்னிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டார்கள்.இந்நிகழ்ச்சியில் காடுகளைப் பற்றி மட்டுமே பேசும் காடுடம் புத்தகம் முன்னாள் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஓய்வு வெ.இறையன்பு இஆப., கலந்துகொண்டு, புத்தகம் வெளியிட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் பெற்றுக் கொண்டார் இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்