வனவிலங்கு வேட்டையாடும் துப்பாக்கியுடன் திரிந்த ஐந்து பேர் கைது.

மதுரை பாலமேடு வனப்பகுதியில் வனவிலங்கு வேட்டையாடும் துப்பாக்கியுடன் திரிந்த ஐந்து நபர்களை கைது செய்தனர்.;

Update: 2025-09-29 12:26 GMT
மதுரை வனப்பாதுகாப்பு படை குழுவினர் நேற்று ( செப். 28)அதிகாலை 2:00 மணிக்கு பாலமேடு- வெள்ளையம்பட்டி ரோட்டில் ரோந்து பணியின் போது பொம்மிநாயக்கன்பட்டி அருகே மறைவாக நின்ற சரக்கு வேனை சோதனையிட்டனர். அதில் ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரு முயல்கள், பேட்டரி லைட்டுகள், ஐந்து வேட்டை நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வேட்டையாடிய சேந்தமங்கலம் சித்திரக்கண்ணன்( 28) ராஜ்குமார் (23) விஜயகுமார் (24) மேட்டுப்பட்டி முத்துக்கிருஷ்ணன்( 23) பொம்மிநாயக்கன்பட்டி லட்சுமணன் (26) ஆகியோரை கைது செய்து அழகர் கோவில் வனச்சரக அலுவலகத்தில் மேல் நடவடிக்கைகாக அழைத்து செல்லப்பட்டனர்.

Similar News