முறப்பநாடு: கஞ்சா வழக்கில் குற்றவாளி மீது குண்டாஸ்
முறப்பநாடு: கஞ்சா வழக்கில் குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது;
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சிக்கிய சுப்பையா மகன் சின்னதம்பி (28), பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் உத்தரவின்படி இன்று (29.09.2025) முறப்பநாடு காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.