தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் முத்துதேவன்பட்டி பகுதியில் நேற்று (செப்.30) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் அவரது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.