தேனி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (60). இவர் தேனி அரசு சட்டக் கல்லூரி பெண்கள் விடுதியில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணியில் இருந்த பொழுது இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடன் பணிபுரிபவர்கள் அர்ஜுனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு (அக்.3) பதிவு செய்து விசாரணை.