வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

வேப்பனப்பள்ளி அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை;

Update: 2025-10-05 01:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள கே.கொத்தூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (35) கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் கும்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் உடல்நலக்குறைவால் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது டாக்டர்கள் மது நீங்கள் அருந்தக்கூடாது என கிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். அதை மீறி மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த போது குடுபம்பத்தினர் அவரை கண்டித்தில் மனமுடைந்த கிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி இருந்த நிலையில் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News